தேர்தல் முறைகேடு குறித்து ராகுல் காந்தி சேகரித்த தரவுகளை தேர்தல் ஆணையம் நிராகரிக்க முடியாது

1 Min Read

மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்

சென்னை, ஆக.8 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பாரதீய ஜனதா தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கருநாடகத்தில் பெங்களூரு மத்திய தொகுதியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

 

இந்தநிலையில் மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியதாவது:-

கருநாடகாவில் உள்ள ஒரு நாடாளு மன்றத் தொகுதிக்குள் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோசடி செய்யப்பட்டு திருடப்பட்டது என்பதை நிரூபிக்கும் ஒரு வலிமையான ஆதாரத்தை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.

ராகுல் காந்தி 6 மாத கால கடின மான முயற்சியின் மூலம் சேகரித்த தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் புறக்கணிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது. மகாதேவபுரா தொகுதியில் எவ்வாறு மோசடி செய்யப்பட்டது என்பது குறித்த தரவுகளை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்; தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நிறைய இருக்கிறது என அதில் பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *