மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம்
சென்னை, ஆக.8 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பாரதீய ஜனதா தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். கருநாடகத்தில் பெங்களூரு மத்திய தொகுதியில் இந்த முறைகேடு நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியதாவது:-
கருநாடகாவில் உள்ள ஒரு நாடாளு மன்றத் தொகுதிக்குள் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோசடி செய்யப்பட்டு திருடப்பட்டது என்பதை நிரூபிக்கும் ஒரு வலிமையான ஆதாரத்தை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார்.
ராகுல் காந்தி 6 மாத கால கடின மான முயற்சியின் மூலம் சேகரித்த தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் புறக்கணிக்கவோ அல்லது நிராகரிக்கவோ முடியாது. மகாதேவபுரா தொகுதியில் எவ்வாறு மோசடி செய்யப்பட்டது என்பது குறித்த தரவுகளை ராகுல் காந்தி வழங்கியுள்ளார்; தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நிறைய இருக்கிறது என அதில் பதிவிட்டுள்ளார்.