சிறீநகர், ஆக.7 ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மிரின் உதம்பூர் மாவட்டத்தில் மத்திய போலீஸ் படை ( சி.ஆர்.பி.எப்.,) வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாக னம் சென்று கொண்டிருந்தது. திடீரென வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.