செங்கோல் விவகாரம் : பிஜேபியின் கட்டுக்கதை வெளியானது ஜெயராம் ரமேஷ் அம்பலப்படுத்துகிறார்

Viduthalai
2 Min Read

புதுடில்லி, ஜூன் 10 புதிய நாடா ளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் 28-ஆம் தேதி திறந்து வைத்தார். இந்தப் புதிய கட் டடத்தில் மக்களவை தலை வர் இருக்கையின் அருகே தமிழ்நாட்டின் சோழர்கள் ஆட்சிக்காலத்தில் ஆட்சி மாற்றத்துக்கு அடையாள மாக பயன்படுத்தப்படுகிற செங் கோலை பிரதமர் மோடி நிறுவினார். இந்த செங்கோல் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வரு கின்றன. இந்திய விடுதலையின்போது, கடைசி ஆளுநர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் பிரபு, நேருவிடம், ” இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம், அதை எப்படி அடை யாளப்படுத்துவது?” என்று கேட்ட போது, அவர் மூதறிஞர் ராஜாஜியை அணுகி, “இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு அவர், “தமிழ்நாட்டில் சோழ மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும் போது, அதை அடையாளப்படுத்து வதற்கு செங்கோலை புதிய மன்னருக்கு கொடுப்பது வழக்கம், இப்போதும் அதன் படியே ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தலாம்” என்று கூறினாராம். 

அதன் படியே சென்னையில் செங் கோல் தயாராகி, மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் கொடுத்து வாங்கி, பின்னர் அன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜவகர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என பா.ஜ.க. தரப்பில் அதன் மூத்த தலைவர் அமித் மாளவியா மே 26-ஆம் தேதி தெரிவித்தார்.  ஆனால் அப் போது, ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந் திரம் வழங்கப்பட்டபோது, ஆட்சி மாற் றத்தை அடையாளப்படுத்துவ தற்காக செங்கோல் வழங்கப்பட்ட தற்கு ஆவணப்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்தார். 

இந்த நிலையில் நாளிதழ் ஒன்றில் வெளியான திருவாவடுதுறை ஆதீனத்தின் பேட்டியை சுட் டிக்காட்டி, செங்கோல் விவகாரத்தில் பா.ஜ.க.வின் கட்டுக் கதை அம்பல மாகி விட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில் நேற்று  (9.6.2023) பதிவு வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் அவர் கூறி இருப் பதாவது:- ஆக, பா.ஜ.க.வின் போலித் தகவல் மூட்டை வெளிப்படுத்தப் பட்டு விட்டது. அதுவும், திரு வாவடுதுறை ஆதீன சுவாமி களால், வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட் பேட்டன் இல்லை. ராஜாஜி கிடை யாது. 

1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ஆம் தேதி ஆட்சி மாற்றத்துக்கு இது (செங்கோல்) அங்கம் வகிக்க வில்லை. ஆனால், அந்த கம் பீரமான செங்கோல் உண் மையில் நேருவுக்குக் கொடுக்கப்பட்டது. 

இன்றைய மன்னர் மற்றும் அவரது துதிபாடிகளின் பொய் களுக்கு மாற்றாக உண்மைகள் உள்ளன. 

இவவாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *