கோர ரயில் விபத்து உண்மைக் காரணத்தை மறைக்க முயலும் ஒன்றிய அரசு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றச்சாட்டு!

அரசியல்

கொல்கத்தா, ஜூன் 10– ஒடிசா ரயில் விபத்துக்கான உண்மைக் காரணம் வெளியே வர விடாமல் ஒன்றிய அரசு தடுக்கிறது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டி யுள்ளார். 

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த, காயம டைந்த மேற்கு வங்க மாநி லத்தை சேர்ந்த பயணிகளின் உறவினர்களுக்கு நிவாரண நிதிக்கான காசோலை மற்றும் அரசு வேலைக்கான நியமனக் கடிதங்களை வழங்குவதற் காக மேற்கு வங்க அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சி கொல் கத்தாவில் நடந்தது. அதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கலந்து கொண்டு நிவாரண நிதி மற்றும் அரசு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

விழாவில் அவர் பேசும் போது,’ ஒடிசா ரயில் விபத்தில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த 103 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 86 பேரை இதுவரை அடையாளம் காண முடிந்துள்ளது. 

172 பேர் பலத்த காயங்களுடனும், 635 பேருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளது. பாலசோர் விபத்தின் பின்னணியில் உள்ள காரணத்தை மறைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

இதை பேச விடாமல் தடுக்க மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 16 நகராட்சிகளில் சோதனை செய்ய சி.பி.அய்.யை அனுப்பியுள்ளது. இந்த சோதனைகள் மூலம் உண்மையை உங்களால் (பாஜக அரசு) மறைக்க முடியாது. உண்மை வெளிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். விபத்தில் காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் குடும்ப உறுப் பினர்களும் விபத்துக்கான காரணத்தை அறிய விரும்பு கிறார்கள். அதன் பின்னணியில் உள்ள குற்றவாளியை கடுமையாக தண்டிக்க வேண்டும். 

இவ்வாறு மம்தா தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *