புதுடில்லி, ஆக.6 சீன விவகாரம் தொடர்பாக இந்திய ராணுவத்தை தவறுதலாக விமர்சித்ததாக தொடரப் பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நேற்று (5.8.2025) நடைபெற்றது.
இந்த வழக்கில் நீதிபதிகள், ராகுல் காந்தியை கடுமையான கேள்விகளால் அவரை சங்கடத்திற்குள் ஆளாக்கினர்.
இதேபோல, ஒன்றிய அரசும் ராகுலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது. ராகுல் காந்தி குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்தி நேற்று (5.8.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறிய தாவது:
யார் உண்மையான இந்தியர் என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்யவேண்டாம். எனது சகோதரர் இந்திய ராணுவத்தின் மீது அதீத மரியாதை கொண்டவர். எப்போதும் அவர் குறைத்துப் பேச மாட்டார். அவர் எதுவும் தவறாகப் பேசவில்லை. அவருக்கு ஓர் எதிர்க்கட்சி தலைவராக கேள்வி எழுப்ப உரிமை உண்டு. அரசுக்கு சவால் விடும் வகையில் கேள்வி கேட்பது அவரது கடமை.
அந்த அடிப்படையிலேயே சீன விவகாரம் குறித்துப் பேசினார். ஆனால், அவரது கருத்து தவறுதலாக திரித்து பேசப்படுகிறது என தெரி வித்தார்.