ஏழுமலையான் தடுக்கவில்லையே! திருப்பதியில் தொடர் நகை பறிப்பு!

0 Min Read

திருப்பதி, ஆக.5 திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகை, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்து பெண்களின் தாலி, தங்க செயின்களை திருடி வந்த மராட்டியத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பலைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள 87 கிராம் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *