நாமக்கல் மாவட்டம் சார்பில் பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நன்கொடை திரட்டித் தருவோம் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

நாமக்கல், ஆக. 4- நாமக்கல் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம். 2.8.2025 சனி மாலை 4.30 மணியளவில் திருச்செங்கோடு பூமாலை வணிக வளாகம் முதல் தளத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார் கணேசன், நிகழ்விற்கு தலைமை தாங்கினார் நகர இளைஞரணி தலைவர் கி.நந்தகுமார், அனைவரையும் வரவேற்றார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, கூட்டத்தின் நோக்கங்களை விளக்கமாகப் பேசினார் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், மாவட்ட தலைவர் அ.கு.குமார், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் வை.பெரியசாமி, ஆகியோர் கருத்துரையாற்றினர்.

பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ப.இளங்கோ, மாவட்ட இளைஞரணி செயலா ளர் சு.சேகர், திருச்செங்கோடு நகர தலைவர் வே.மோகன், திருச் செங்கோடு நகர செயலாளர் மா. முத்துக்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜா, குமாரபாளையம் நகரத் தலைவர் சு.சரவணன், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, பள்ளிபாளையம் ஒன்றிய அமைப்பாளர் மு. சீனிவாசன், வெண்ணந்துறை ஒன்றிய அமைப்பாளர் இலப. செல்வகுமார், மேட்டூர் நகர செயலாளர் கலையரசன், மாணவர் கழகத் தோழர்கள் பிரசாந்த்,சுந்தர், தீனா, புத்தர் கட்சி பொறுப்பாளர் சிவக்குமார், மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

இறுதியாக திருச்செங்கோடு நகர இளைஞரணி செயலாளர் வே.பாரதிராஜா, நன்றி கூறினார்.

  தீர்மானங்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும். புதிய சந்தாக்களை சேர்ப்பது என முடிவு செய்யப்படுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் இளைஞரணி சார்பில் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி கழக அமைப்புகளை புதுப்பிப்பது எனவும் கிளைக் கழகங்கள் வாரியாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கூட்டங்களை நடத்துவது. கழகத் தோழர்கள் இல்லங்கள்தோறும் கழக கொடி ஏற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.

தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியான துண்டறிக்கையை  உடனடியாக அனைத்து இடங்களிலும் ஆசிரியர் அவர்கள் அறிவிப்பிற்கு இணங்க வீடு வீடாக கடை கடையாக கழக இளைஞரணி சார்பில்  பரப்புவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமை யில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதியின் சரித்திர நாயகர்  மு.க.ஸ்டாலின் சிறப்புரையுடன் சென்னை மறைமலை நகரில் 2025 அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டிற்கு நாமக்கல் மாவட்டத்திலிருந்து தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது. மாநாட்டை விளக்கி சுவர் எழுத்து விளம்பரங்களை செய் வது என முடிவு செய்யப் படுகிறது.

திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நன்கொடை திரட்டி தருவது என தீர்மானிக்கப்படுகிறது.

உலகத் தலைவர். தத்துவத் தலைவர் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நாமக்கல் மாவட்டம் முழுவதும் இளைஞரணி சார்பில் பட்டித்தொட்டி எங்கும் கோலாகலமாக விழா கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது.

பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மாவட்ட இளைஞரணி தலைவர் ஆனந்தகுமார் கணேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரசாந்த், திருச்செங்கோடு ஒன்றிய திராவிடர் கழக ஒன்றிய அமைப்பாளர் சு.சேகர்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *