மேனாள் சிறப்பு வழக்குரைஞர் ஜாக் ஸ்மித் மீது அமெரிக்காவில் விசாரணை டிரம்ப் வழக்குகளின் தாக்கம் ஆராய்வு!

நியுஜெர்சி, ஆக. 4– அமெரிக்க மேனாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது வழக்குத் தொடர்ந்த மேனாள் அரசாங்கச் சிறப்பு வழக்குரைஞர் ஜாக் ஸ்மித் (Jack Smith) மீது அமெரிக்க அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஸ்மித்தின் செயல்பாடுகள் 2024 அதிபர் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பதை ஆராய இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குடியரசுக் கட்சியின் செனட்டர் டாம் கோட்டன் (Tom Cotton) விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஜாக் ஸ்மித் 2022-ஆம் ஆண்டு அரசாங்கச் சிறப்பு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டார்.

டிரம்ப் மீது வழக்கு

அவர் டிரம்ப் மீது இரண்டு முக்கிய வழக்குகளைத் தொடர்ந்தார்: 2020 அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக ஒரு வழக்கு மற்றும் ரகசிய ஆவணங்களைத் தவறாகக் கையாண்டதாக மற்றொரு வழக்கு. எனினும், டிரம்ப் இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்து வந்தார்.

இந்த இரு வழக்குகளும் விசாரணைக்குச் செல்லவில்லை. 2024 அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்ற பின்னர், சிறப்பு வழக்குரைஞர் ஜாக் ஸ்மித் இந்த இரு வழக்குகளையும் கைவிட்டார். டிரம்ப் தன்னை பணியிலிருந்து நீக்குவதற்கு முன்பே ஸ்மித் தனது பதவி விலகினார் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் மீது நடத்தப்படும் விசாரணை, அமெரிக்க அரசியல் மற்றும் நீதித்துறையில் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *