திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம் மற்றும் பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

1 Min Read

திருச்சி, ஆக. 3– திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்,  மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகள் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம், வரகனேரி, பிரான்சிஸ் படிப்பகம் அருகில் 29.7.2025 அன்று மாலை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஜெயில்பேட்டை பகுதி செயலாளர் மா.குணா வரவேற் புரையாற்றினார்.  மாவட்ட ப.க. செயலாளர் மலர்மன்னன் தலைமை வகித்தார். கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்ட செயலாளர் சு.மகாமணி, மாநில திராவிட மாணவர் கழக துணைச் செயலாளர் ஆ.அறிவுச்சுடர், மேனாள் மாவட்ட செயலாளர் இரா.மோகன்தாஸ், மாநகர தலைவர் வ.ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில்  திருவரங்கம் நகர தலைவர் சா.கண்ணன், ஜெயில்பேட்டை அமுதா, திருவரங்கம் நகர துணை தலைவர் அண்ணாதுரை, மாவட்ட காப்பாளர் மு.நற்குணம், 30ஆவது வட்ட திமுக செயலாளர் சாகுல் ஹமீது, மாநகர ப.க. தலைவர் குத்புதீன், மாவட்ட மகளிரணி செயலாளர் சு.சாந்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் பி.தேவா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.சங்கீதா, திருவரங்கம் நகர செயலாளர் இரா.முருகன், ப.க. ஆலோசகர் மணியன், அண்ணா வளைவு நகர தலைவர் விடுதலை கிருஷ்ணன், த.ஜெயராஜ் மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *