ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை தாக்கீது!

மும்பை, ஆக.2 ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு அமலாக்க இயக்குநரகம் தாக்கீது அனுப்பியுள்ளது. ரூ.17,000 கோடி மதிப்புள்ள கடன் மோசடி தொடர்பான வழக்கில் இந்த மாதம் 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு இந்த தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 24 ஆம் தேதி, அனில் அம்பானிக்கு சொந்தமான மொத்தம் 50 நிறுவனங்கள், 25 வணிக கூட்டாளர்களின் வீடுகள் மற்றும் அம்பானி குழும நிறுவனங்களின் நிர்வாகிகளின் 35 க்கும் மேற்பட்ட அலுவலகங்களில் அமலாக்க இயக்குநரகம் திடீர் சோதனைகளை நடத்தியது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த மூன்று நாள் சோதனைகளின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினி சாதனங்களை (ஹார்ட் டிஸ்க்குகளை)அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *