கல்வியாளர் வசந்திதேவி அம்மையார் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்

1 Min Read

மூத்த கல்வியாளர் பேராசிரியர்  முனைவர் வசந்திதேவி அவர்கள் தமது 87-ஆம் வயதில் நேற்று (1.8.2025) மறைவுற்ற செய்தி அறிந்து வருந்துகிறோம். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணி யாற்றியவர். கல்வி உரிமைச் செயற்பாட்டாளர். பொதுக் கல்விக்கான இயக்கங்களில் ஈடுபட்டு, அவற்றுக்கு ஊக்கம் தந்தவர். தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினர், மாநில மகளிர் ஆணையத் தலைவர்  உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியவர்.

கல்வித் துறையின்மீது நிகழும் தொடர் தாக்குதல்கள், தனியார் மயம், காவிப் பாசிசப் போக்குகள், சமூக நீதிக்கு எதிரான திட்டங்களைத் தொடர்ந்து எதிர்த்துப் போராடியவர். இந்தக் காலகட்டத்தில் அவருடைய மறைவு பேரிழப்பாகும்.

அவருடைய மறைவால் துயருறும் குடும்பத்தினர், தோழர்கள், உறவினர்கள் உள்ளிட்டோருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை                 

2.8.2025 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *