பெரியார் வலைக்காட்சி தகவல் நுட்ப மேனாள் பணியாளர் கலைமதியின் வாழ்விணையர் ரெவ்.ஆர்.செல்லப்பா மறைவிற்கு இரங்கல்

1 Min Read

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பூவை செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோரின் சகோதரி மாலதியின் மருமகனும், பெரியார் வலைக் காட்சியின் தகவல் தொழில்நுட்ப மேனாள் பணியாளர் கலைமதியின் வாழ்விணையருமான  ரெவ்.ஆர்.செல்லப்பா அவர்கள் நேற்று (31.07.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். ஜாதி, மதங்களை கடந்து வாழ்க்கை இணை ஏற்றவர்கள் இருவரும்; சமூகநீதி சிந்தனையில் ஆழ்ந்த பற்று கொண்டவரான ரெவ்.ஆர்.செல்லப்பா அவர்களின் மறைவுக்கு திராவிடர் கழகத்தின் சார்பிலும், பெரியார் திடல் பணித் தோழர்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் தொலைபேசி வாயிலாக தோழர் கலைமதி அவர்களைத் தொடர்புகொண்டு ஆறுதலை தெரிவித்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *