‘நன்னன்குடி’ விழாவில் ‘இவர்தாம் பெரியார்’ நூல் வெளியீடு

1 Min Read

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

புலவர் மா. நன்னன், அவரது மகன் டாக்டர் அண்ணல் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழாவில் டாக்டர் மா. நன்னன் எழுதிய இவர்தாம் பெரியார் (வரலாறு) –14, தொழிலாளர், புரட்சிக்காரி மாதவி, இடுக்கண் களைவதும் இடித்துரைப்பதும் நட்பு (சிறுகதைகளின் தொகுப்பு) ஆகிய நூல்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். விழாவிற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் ஆகியோர் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். விழாவில் புலவர் மா.நன்னனின் நினைவாக  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  சுயமரியாதைத் திருமணம் புரிந்த அய்ந்து வாழ்விணையர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் சான்றிதழும், பரிசுத் தொகையும் வழங்கி புலவர் மா. நன்னன் குறித்த இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.  உடன்:  புலவர் மா. நன்னனின் வாழ்விணையர் பார்வதி, மகள்கள் வேண்மாள், அவ்வை.
(சென்னை 30.7.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *