என்றும் இந்த சாவு செய்தியா? இமாசலப் பிரதேசத்தில் கோயிலுக்குச் சென்று திரும்பிய பக்தர்கள் எட்டு பேர் சாவு!

1 Min Read

சண்டிகார், ஜூலை 29- இமாசலப் பிரதே சதத்தில் உள்ள கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் குழு ஒன்று வேனில் பஞ்சாபில் உள்ள சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். 27.7.2025 அன்று  இரவு அவர்கள் பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள ஜாக் கிராமப் பகுதியில் வந்தபோது, ஓட்டுநர் மற்றொரு வாகனத்தை முந்திச் செல்லமுயன்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இதில் வேனில் இருந்த, ஓட்டுநர் உள்பட 30 பக்தர்களும் நீரில் மூழ்கினர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்ட னர். அப்போது 8 பக்தர்கள் பிணமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் பெண்கள், 3 பேர் குழந்தைகள் ஆவர்.

மேலும் பலர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *