திருமணத்துக்கு முன்பு எச்.அய்.வி. பரிசோதனை கட்டாயம் மேகாலயாவில் சட்டம் வருகிறது!

1 Min Read

ஷில்லாங், ஜூலை 27- எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா 6ஆவது இடத்தில் உள்ளது என்று மேகாலயா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேகாலயா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அப்பரீன் லன்டோ நேற்று முன்தினம் (25.7.2025) செய்தியா ளர்களிடம் கூறியதாவது:-

எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6ஆவது இடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.அய்.வி. பாதித்தவர்கள் அதிகம். எனவே திருமணத்துக்கு முன்பு எச்.அய்.வி. பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற பரிசீலனை செய்து வருகிறோம். கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாமும் ஏன் அதை சட்டமாக்கக் கூடாது. இது சமுதாயத்துக்கு பெரும் பயன்தரும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாநில துணை முதலமைச்சர் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்டார். கூட்டத்தில் எய்ட்ஸ் சோதனையை சட்டமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *