மதுரை அரவிந்த் கண் மருத்துவருக்கு கழகத்தின் சார்பில் இரங்கல்

0 Min Read

மதுரை அரவிந்த் கண் மருத்துவக் குழுமத்தின் மேனாள் தலைவரும்,  பிரபல கண்மருத்துவருமான பத்மசிறீ பி.நம்பெருமாள்சாமி (வயது86) சென்னையில் இயற்கை எய்தினார். மதுரை அண்ணா நகர் இல்லத்தில் மருத்துவருக்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா.நேரு, மாநில செயலாளர் சுப.முருகானந்தம், மாவட்ட துணை தலைவர் நா.முருகேசன்,  தியாகராஜன் ஆகியோர் அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இரங்கல் செய்தியை கண்மருத்துவர் நாச்சியாரம்மாள் அவர்களிடம் வழங்கினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *