‘நெக்ஸ்ட்’ என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்

Viduthalai
2 Min Read

அரசியல்

சென்னை, ஜூன் 14 இளநிலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவி லான தேர்வாகவும், முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக் கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத் தேசித்துள்ள ‘நெக்ஸ்ட்’ என்ற ஒருங்கிணைந்த தேசிய மருத் துவ தகுதித்தேர்வுக்கு எங்களின் கடு மையான எதிர்ப்பை தெரி விக்கும் வகையில் இந்த கடி தத்தை எழுதுகிறேன். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற் கெனவே ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியி ருக்கிறோம். மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர்வதற்காக ‘நீட்’ மற்றும் ‘நெக்ஸ்ட்’ என்ற எந்த வகையான தேர்வு என்றாலும் அதை தமிழ் நாடு தொடர்ந்து எதிர்த்து வரு கிறது.

தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ‘நீட்’ தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ‘நெக்ஸ்ட்’ தேர்வை அறிமுகப்படுத்துவது, கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர் களுக்கும், பள்ளிக் கல்வியின் அடிப்படையில் நடத்தப்படும் தேர்ச்சி முறை மற்றும் மாநில அரசின் கீழ் இயங்கும் மருத் துவக் கல்வி நிறுவனங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவக் கல்விக்கான பாடத் திட்டம், தேசிய மருத்துவக் கழகத்தின் விதிகளின்படி திட்டமிடப்பட் டுள்ளது. பாடத்திட்டங்கள், பயிற்சி மற்றும் தேர்வுகள் அனைத்தும் அந்தந்த மாநில மருத் துவ பல்கலைக்கழகங் களால் உன்னிப்பாக கண் காணிக்கப் பட்டு வருகிறது. கடுமையான பயிற்சி, தேர்வு முறைகள் ஆகியவற்றை முடித்த பிறகுதான் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மூலம் மாணவர் களுக்கு எம்.பி. பி.எஸ். பட்டம் வழங்கப் படுகிறது.

இந்த சூழ்நிலையில் பொது நுழைவுத் தேர்வு என்ற பெயரில் வைக்கப்படும் தேர்வுகள், மாண வர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும். ஏற் கெனவே படிப்பு தொடர்பான அழுத்தங்கள், சுமைகள் போன் றவற்றை கணக் கிட்டால் இது போன்ற தேர் வுகள் தவிர்க்கப் பட வேண்டும். இதுபோன்ற நுழைவுத் தேர் வுகளை கட் டாயப்படுத்துவது அவர்களின் ”கிளினிக்கல்” படிப் பில் தாக்கங் களை ஏற்படுத்தும்.

ஏனென்றால், நுழைவுத் தேர்வுக்காக அவர்கள் அதிக மாக ‘தியரி” கல்வியில் கவ னத்தை செலுத்த வேண்டிய தாகிவிடும். இது அவர்களின் கல்வித் திறனை பாதிக்கும். 

எனவே மாணவர்களுக்கும் மாநிலத் திற்கும் ‘நெக்ஸ்ட்’ தேர்வை அறி முகம் செய்வது தேவையற்றது என்பதை மீண் டும் சுட்டிக் காட்ட விரும்புகி றேன். மருத்துவப் பிரிவில் மாநில அரசு மற்றும் பல்கலைக் கழகங் களுக்கு உள்ள பங்களிப்பை நீர்த்துப் போகச் செய்ய இந்த முயற்சி எடுக்கப்படுவதாக எண் ணத் தோன்றுகிறது. எனவே, ஏற்கெ னவே உள்ள தேர்வு முறையை நீடிக்கச் செய்து, ‘நெக்ஸ்ட்’ தேர்வை அறிமுகம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *