தலைமைச் செயலகத்திற்குள் சென்று சோதனை நடத்துவதா? பாஜகவின் மிரட்டல் அரசியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Viduthalai
2 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூன் 14 – தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

தன்வசம் இருக்கும் விசா ரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அர சியல் சக்திகளை பாஜக பழிவாங் கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன். அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் (13.6.2023) காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

விசாரணைக்கு முழு ஒத்து ழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகை யில் அத்துமீறி – அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத் தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசா ரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக் கிறார்கள். 

தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக் கிறார்கள். இதனைக் கண்டித்து விரிவான அறிக்கையை  நான் நேற்று மாலையே கொடுத்துள் ளேன். நான் மட்டுமல்ல, அகில இந்திய கட்சித் தலைவர்களும், பல்வேறு மாநில முதலமைச்சர் களும் இதனைக்கண்டித்துள் ளார்கள். ஏனென்றால் இது மாதிரி பா.ஜ.க. இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருவதை இந்தியாவின் அனைத்துத் தலை வர்களும் அறிவார்கள். 

அது தான் இங்கும் நடக்கி றது. விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லைக் குள்ளாக்கி இருப்பதாக தெரிகி றது. நெஞ்சுவலி ஏற்படும் அள வுக்கு நெருக்கடியைக் கொடுத் திருக்கிறார்கள். நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப் போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார். 

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்? இந்த வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக் கத்துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது தேவையா? அதிகாரிகளை ஏவி யவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது. 

என்ன வழக்கோ அதனை சட்டப்படி வி.செந்தில் பாலாஜி சந்திப்பார். எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர் வோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க. உறுதியுடன் எதிர்கொள்ளும். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்கு முறைகளை மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *