ரஷ்ய விமான விபத்தில் 49 பயணிகள் உயிரிழப்பு

1 Min Read

மாஸ்கோ, ஜூலை 25-  ரஷ்யாவில் சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று (24.7.2025) விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 49 பேரும் உயிரிழந்தனர்.

விமான விபத்து

சைபீரியாவில் இருந்து இயக்கப்படும் ரஷ்யாவின் அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏஎன்24 ரக பயணிகள் விமானம், ரஷ்யாவின் பிளாகோ வெஷ்சென்ஸ்க் நகரிலிருந்து, ரஷ்யாவின் அமுர் பகுதியில் உள்ள டிண்டா நகருக்கு நேற்று புறப்பட்டது. இதில் 5 குழந்தைகள் உட்பட 43 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர்.

டிண்டா நகரை நோக்கி சென்ற விமானம் திடீரென விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையின் ரேடாரில் இருந்து மறைந்து, தொடர்பு துண்டானது. இதையடுத்து அந்த விமானத்தை தேடும் பணியில் மீட்பு ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டன. அப்போது டிண்டா நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ள அமுர் வனப்பகுதிக்குள் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் பயணம் செய்த 49 பேரும் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *