பத்திரிகையாளர் மறைந்த அ.மனோகரன் உடலுக்கு கழகத் துணைத் தலைவர் மாலை வைத்து மரியாதை

0 Min Read

‘விடுதலை’ செய்திப் பிரிவில் பணியாற்றி வந்த அ.மனோகரன் நேற்று காலை (24.7.2025) உடல் நலக் குறைவால் மறைவுற்றார். அவருடைய உடலுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். ‘விடுதலை’ செய்திப் பிரிவு – பெரியார் திடல் பணித் தோழர்கள் மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (MUJ) பொதுச் செயலாளர் வை.மணிமாறன், பத்திரிகையாளர் முத்துக்குமார் ஆகியோரும் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். மருத்துவமனையிலிருந்த ஆசிரியர் கி.வீரமணி, அ.மனோகரன் மறைவுச் செய்தியறிந்து ‘மிகவும் துயரமானது’ என்று குறிப்பிட்டு தனது வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்தார். (ஓமாந்துரார் மருத்துவ வளாகம் (மார்ச்சுவரி), 24.7.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *