சென்னை, ஜூன் 14 – தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்ட அம லாக்கத் துறையினர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையிலும் சோதனை நடத் தினர். தலைமைச் செயலக அறையில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய் துள்ளனர்.
காங். தலைவர் கார்கே:
சென்னை தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனைக்கும், அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு காங் கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மோடி அரசு அச்சுறுத்தி வருகிறது. விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விட லாம் என மோடி அரசு நினைக் கிறது. விசாரணை அமைப்பு களை அரசியல் எதிரிகள் மீது பயன்படுத்துவது மோடி அர சின் செயலாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளை இதுபோன்ற தந்திரங்களின் மூலம் அமைதி யாக்கிவிட முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா:
சென்னை தலைமைச் செய லகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கண்டனம் தெரிவித்து உள்ளார். “விசாரணை அமைப்பு களை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துகிறது” என்று மம்தா தனது கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.
டில்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்:
சென்னை தலைமைச் செயலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைக்கு கண்டனம் தெரிவித்த டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் நடத்திய சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை மூலம் நாட்டின் ஜனநாயகத்துக்கு பாஜக கேடு விளைவிக்கிறது என்றும் தனது கண்டனத்தைப் பதிவு செய்து உள்ளார் .
சரத் பவார்:
சென்னை தலைமைச் செயல கத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனைக்கு தேதிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், செந்தில்பாலாஜி மீதான சோதனை மூலம் தென்மாநிலங் களை பழிவாங்க தொடங்கியுள் ளது அமலாக்கத் துறை என்று அவர் கூறியுள்ளார்.
வைகோ
மாநில அரசுக்கு தகவல் தெரிவிக்காமல், இவ்வாறு அமலாக்கத் துறை அத்துமீறி நுழை வது மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர் நிகழ்வுகளாகிவிட்டன. தமிழ்நாட்டிலும் ஒன்றிய பாஜக அரசு அரசியல் காரணங்களுக் காக அமலாக்கத் துறையை பயன்படுத்துவதும், திமுக அரசை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைப்பதும் கடும் கண் டனத்திற்கு உரியது என்று மதி முக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
முத்தரசன்
“அடுத்த வாரத்தில் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர் கட்சிகள் ஒருங்கிணைந்து மாநாடு நடத்துவதும், 2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகம் வகுப்பதும் நாட்டு மக்களிடம் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற விருப் பத்தை தீவிரமாக்கி எழுச்சி அலையை ஏற்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒன்றுபடுத்து வதில் முனைப்புடன் செயலாற்றி வரும் தமிழ்நாடு முதல்வரையும், திமுக தலைமையிலான மதச் சார்பற்ற, ஜனநாயக சக்திகளை யும் அச்சுறுத்தும் செயலாகவே சோதனை நடவடிக்கைகள் தொடர்கின்றன.
அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற சோதனை அமைப்புகள் பாஜக ஆட்சியில் அரசியல் கரு விகளாக மாற்றப்பட்டுள்ளன” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர்
நன்றி:
அமலாக்கத் துறை சோத னைக்கு கண்டனம் தெரிவித்த தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஜன நாயக விரோதமாக அமலாக்கத் துறை சோதனையை ஏவிவிட்டு, கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்து வத்துக்கு ஊறு விளைவித்த ஒன் றிய பாஜக அரசின் செயலுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்தமைக்காக மல்லிகார்ஜுன கார்கே, சரத் பவார், மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி முதலிய அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் எனது நன்றி. நாங்கள் துவளா மல், ஊக்கம் குறையாமல் இருக் கிறோம். பாஜகவின் அச்சுறுத் தும் தந்திரங்களையும் ஜனநாயக விரோத சோதனைகளையும் எதிர்ப்பதில் உறுதிப்பாட்டுடன் இருப்போம்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.