ரூபாய் 3000 கோடி வங்கி கடன் மோசடி அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை

2 Min Read

மும்பை, ஜூலை.25- ரூ.3 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக அனில் அம்பானி தொடர்புடைய நிறுவனங்கள், அலுவலகங் களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

வங்கி கடன்
மோசடி

பிரபல தொழில் அதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்குள் யெஸ் வங்கி கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ரூ.3 ஆயிரம் கோடி கடன் வழங்கியது. யெஸ் வங்கி சட்ட விரோதமாக கடன் வழங்கியதாகவும், அதற்கு பிரதிபலனாக அந்த வங்கி நிர்வாகிகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கடன் தொகையை ரிலையன்ஸ் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தியதாகவும், போலி நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை பண மோசடி தடுப்பு சட்டத் தின் கீழ் விசாரித்து வருகிறது.

அதிரடி சோதனை

இந்தநிலையில் அனில் அம்பானி நிறுவனங்களின் ரூ.3 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி தொடர்பாக நேற்று (24.7.2025) மும்பையில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். டில்லியில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அனில் அம்பானியின் 50 நிறுவனங்களுக்கு சொந்த மான 35 இடங்கள் மற்றும் 25 தனிநபர்களுக்கு சொந்தமான இடங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், கணினி சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அனில் அம்பானியின் நிறுவனங்கள் மேலும் பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கி உள்ளது. வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் விசாரணை அமைப்புகளின் கண்காணிப் பில் இருப்பதை மறைத்து வெவ்வேறு வங்கிகளில் அவரது நிறுவனங்கள் கடன் வாங்கி இருக்கிறது. எஸ்.பி.அய் வங்கி, கனரா வங்கி போன்ற வங்கிகளில் இருந்தும் சட்டவிரோதமாக கடன் பெற்றுள்ளது.

‘மோசடி கடன்’

இதில் பாரத ஸ்டேட் வங்கி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனம் வாங்கிய கடனை ‘மோசடி கடன்’ என வகைப்படுத்தி இருந்தது. இது தொடர்பாக சி.பி.அய்.யில் புகார் அளிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் நாடாளுமன்றத்திலும் தெரிவிக்கப்பட்டது. ‘மோசடி கடன்’ என்று வகைப் படுத்தப்பட்டால் அடுத்த சில ஆண்டுகளுக்கு வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடன் பெற முடியாது.

இந்தநிலையில் அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே அமலாக் கத்துறை சோதனை தங்கள் நிறுவன செயல்பாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என ரிலையன்ஸ் குழுமங் களை சேர்ந்த ரிலையன்ஸ் மின்சாரம், ரிலையன்ஸ் கட்டுமான நிறுவனம் தெரி வித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *