மலேசியாவில் பேருந்துகளில் ‘சீட் பெல்ட்’ அணியாத 1,200 பேர் மீது நடவடிக்கை

1 Min Read

கோலாலம்பூர், ஜூலை 25- மலேசியாவில் பேருந்துகளில் இருக்கை வார்ப்பட்டை (சீட் பெல்ட்) அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவை மீறிய ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் என சுமார் 1,200 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த ஜூன் மாதம் பேராக் மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி 15 பேர் உயிரிழந்தனர். இந்த கோரவிபத்தின் எதிரொலியாக இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

மலேசியாவில் ஜூலை மாதம் முதல் தேதியிலிருந்து விரைவுப் பேருந்துகள் மற்றும் சுற்றுலாப் பேருந்துகள் என  அனைத்துவகைப் பேருந்துகளுக்கும் ‘சீட் பெல்ட்’ அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுவோர் மீது அபராதத்தோடு இரண்டாம் முறை பிடிபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டது

வெளிநாட்டவர் உள்நாட்டவர் என அனைவருக்கும் பொதுவான விதி

சீட் பெல்ட் அணியாமல் இருந்து எச்சரிக்கை வாசகத்தைக் கண்டுகொள்ளாமல் சாக்குப்போக்குச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுப்பயணிகள் அல்லது வெளிநாட்டினர் என அனைவருக்கும் இந்த புதிய விதிமுறை பொருந்தும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *