நீடாமங்கலம் பயிற்சிப் பட்டறையில் கவிஞர் கலி.பூங்குன்றன் எடுத்த வரலாற்றுப் பாடம்!
– வி.சி. வில்வம் –
பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில் 11.06.2023 நீடாமங்கலம் கலைஞர் அறிவாலயத்தில் ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. “பெரியார் ஒரு அறிமுகம்” எனும் தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசியதாவது:
நீடாமங்கலம் பெயர் காரணம்!
நீராட்டு மங்கலம் என்கிற ஊரை உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் இருக்கும் நீடாமங்கலம் தான் அன்றைக்கு நீராட்டு மங்கலம். கடவுளை நீர் கொண்டு கழுவுதல் என்பது இதன் பொருள். பார்ப்பனர் களுக்கு மன்னர்கள் எழுதி வைத்த கிராமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல! அதிலும் மங்கலம் என முடிகிற அத்தனை ஊர்களும் பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுக்கப் பட்டவை. மூன்று வேதங்கள் படித்தால் திரிவேதி மங்கலம், நான்கு வேதங்கள் படித்தால் சதுர்வேதி மங்கலம் என விதவிதமான பெயர்களில் தானங்கள் வழங்கப்பட்டன. அந்த ஊரின் முழு அதிகாரமும் அவர்களிடமே இருந்தது. வசூலாகும் வரியை அவர் களே எடுத்துக் கொள்வார்கள். மன்னருக்குக் கூட கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி பார்ப் பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊர் தான் இந்த நீராட்டு மங்கலம். அது இப்போது நீடாமங்கலமாக மாறியுள்ளது.
சமபந்தி போஜனமும்! ஜாதி வெறியும்!!
திராவிடர் கழகத்தின் கோட்டையாக இருக்கிற ஊர் நீடாமங்கலம். எப்படி கோட்டையாக மாறியது என்கிற வரலாற்றையும் உங்களுக்குச் சொல்கிறேன். 1937 டிசம்பர் 28 ஆம் நாளில் காங்கிரஸ் மாநாடு ஒன்று நடைபெற்றது. ஜாதி வேறுபாடுகள் அதிகம் இருந்த காலகட்டம். அன்றைய தினம் அனைவரும் ஒரே இடத் தில் உணவு சாப்பிடுவது போல “சமபந்தி போஜனம்” என்கிற ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த விருந்தில் ஒடுக்கப்பட்ட மக்களும் பங்கேற்றனர்.
அப்படி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் சந்தான இராமசாமி என்கிற ஜாதி வெறியர், “என் பண் ணையில் வேலை செய்பவர்கள் என் எதிரிலேயே அமர்ந்து சாப்பிடுவதா?” எனக் கோபம் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்கினார். கடுமையான அடியும், உதையும் வாங்கிக் கொண்டு அனைவரும் ஓடி ஒளிந்தனர். வெறி அடங்காத அந்தப் பண்ணையார் அடுத்த நாள் தனது தோட்டத்தில் கட்டி வைத்து, மொட்டை அடித்து, சாணியைக் கரைத்து வாயில் ஊற்றியுள்ளார். இந்த நிகழ்வுக்குப் பிறகு பல குடும்பங் களும் ஊரை விட்டே வெளியேறினர். “என் மகனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது, அவருக்கு மொட்டை அடிக்க வேண்டாம்”, என்று கெஞ்சிய கொடுமைகளும் அங்கு நடந்துள்ளது.
எந்தப் பத்திரிகை கவலைப்பட்டது?
இந்த ஜாதிக் கொடுமைகள் குறித்து எந்தப் பார்ப்பனப் பத்திரிகைகளும் எழுதவில்லை. பெரியார் எழுதினார், ‘குடி அரசு’ இதழில் கடுமையாக எழுதினார்.
அன்றைக்குக் ‘குடிஅரசு’ ஆசிரியராக இருந்த அ.பொன்னம்பலனார் அவர்களை நீடாமங்கலத்திற்கு அனுப்பி நேரில் தகவல் திரட்ட சொன்னார். பாதிக்கப் பட்ட மக்களைச் சந்தித்து, அதன் பின்னரும் விரிவான செய்திகள் ‘குடி அரசு’ இதழில் வந்தன. பிறகு பெரியார் நீடாமங்கலம் வந்தார். அனைவரையும் சந்தித்தார்.
பெரிதும் பாதிக்கப்பட்ட 3 பேரை ஈரோட்டிற்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார். தூத்துக்குடியில் 1948 இல் நடைபெற்ற இயக்க மாநாட்டில் அந்த 3 பேரையும் பேசச் சொன்னார். அதில் ஆறுமுகம் என்கிற தோழருக்கு காவல்துறையில் வேலை வாங்கிக் கொடுத்தார். அவரது மகனுக்கு ஆயுதப்படையில் வேலை கிடைத்தது. இன்றைக்கு ஆறுமுகம் அவர் களின் பெயரன் அமெரிக்காவில் வேலை செய்கிறார். இந்த ஆறுமுகம் அவர்களின் இருப்பிடத்தைக் கண்ட றிந்து, சென்னை பெரியார் திடலுக்கு வரவழைத்து சிறப்பு செய்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
நினைவுக் கல்வெட்டு!
சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் நூற்றாண்டை ஒட்டி 29.08.1988 அன்று நீடாமங்கலத்தில் ஒரு கல்வெட்டு திறக்கப்பட்டது. தஞ்சை கா.மா.குப்புசாமி தலைமை யேற்கவும், ஆர்.பி.சாரங்கன், ராஜகிரி கோ.தங்கராஜ் முன்னிலை யேற்கவும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி திறந்து வைத்தார். சமபந்தி போஜனத்தில் ஏற்பட்ட ஜாதி வெறியாட்டத்தை நினைவு கூரும் வகையில் அது எழுப்பப்பட்டது. நீடாமங்கலம் கொடுமைகளைத் தொடர்ந்து சமபந்தி உணவு விடுதி, பெரியார் உணவு விடுதி, திராவிடர் உணவு விடுதி எனத் தோழர்கள் உண வகங்கள் திறந்தனர்.
நீடாமங்கலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை உங்களுக்குச் சுட்டிக்காட்டி இருக்கிறோம். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான வரலாறுகள் திராவிடர் கழகத்திற்கு உண்டு. தமிழர்களின் சுயமரி யாதையைப் பாதுகாத்த இயக்கம் திராவிடர் கழகம். அந்த வரலாறுகளை எல்லாம் மாணவர்கள் படிக்க வேண்டும்.
– இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கேட்டுக் கொண்டார்.
நிகழ்வில் ‘‘கடவுள் மறுப்புத் தத்துவம் – ஒரு விளக்கம்” எனும் தலைப்பில் அதிரடி அன்பழகன், ‘‘சமூக நீதி வரலாறு” எனும் தலைப்பில் கோ.கருணாநிதி, ‘‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்” எனும் தலைப்பில் நம்.சீனிவாசன், ‘‘சமூக ஊடகங்களில் நமது பங்கு” எனும் தலைப்பில் மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம் ஆகியோர் பேசினர். நிகழ்வின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழும், நூல்களும் வழங்கப் பட்டன. வகுப்புகளை நன்கு கவனித்துக் குறிப்பெடுத்த மூவருக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பங்கேற்றோர்!
நிகழ்ச்சி தொடக்கத்தில் “எங்கள் அய்யா பெரியார் – அவர் உலக அறிவு ஆசான், தங்கமான குணம்தான் – இவர் தரணி போற்றும் மேதை’, எனும் பாடலை வழக்குரைஞர் சு.சிங்காரவேலு பாடினார். மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஆசிரியர் தங்க.வீரமணி வரவேற்புரை கூறினார். மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், செயலாளர் கோ.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் சிவஞானம், மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர் சி.ரமேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட ஆசிரியரணி தலைவர் த.வீரமணி, ஒன்றியச் செயலாளர் ச.அய்யப்பன், இளைஞரணி நகரத் தலைவர் இரா.அய்யப்பன், ஆசிரியரணி ஒன்றிய அமைப்பாளர் க.முரளி, மாவட்டத் துணைச் செயலாளர் வீ.புட்பநாதன், மாவட்ட அமைப்பாளர் ஆர் எஸ் அன்பழகன், மாவட்டத் துணைத் தலைவர் இன்பக் கடல், மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி செயலாளர் கோபால், கோட்டூர் ஒன்றியத் தலைவர் நாராயணசாமி, செயலாளர் குமார், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வை.கவுதமன், மன்னார்குடி நகரச் செயலாளர் இராமதாஸ், மன்னார்குடி ஒன்றியத் தலைவர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர் சி.ரமேஷ் நன்றி கூறினார்.
மதிய உணவை மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் நீடாமங்கலம் உ.கல்யாணசுந்தரம் வழங் கினார். சுயமரியாதைச் சுடரொளி மன்னை நாராயண சாமி அரங்கத்தை நீடாமங்கலம் ஒன்றிய திமுக அனுமதியளித்தது.
நெகிழ்ச்சி…!
கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் கிராமத் தில் இருந்து இணையர்கள் எஸ்.கோவிந்தராஜன் (80), கோ.புஷ்பவள்ளி (75) இருவரும் பயிற்சி வகுப்பிற்கு வந்திருந்தனர். காலை 9 முதல், மாலை 4 மணி வரை அங்குமிங்கும் அசையவில்லை.
அவர்களிடம் பேசிய போது, “இது மாணவர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி என்பது தெரியும். இருந்தாலும் நம் இயக்க நிகழ்ச்சி அருகில் நடக்கும் போது வராமல் இருக்க முடியுமா என்றனர். இன்னும் இறுதி வரை கூட இருக்கலாம். எனினும் 20 கிலோ மீட்டர் பயணம், இரண்டு பேருந்து மாறி செல்ல வேண்டும் என்றனர்.
மாணவர்கள் விவரம்
நீடாமங்கலம் 5, சம்பாவெளி 1, பெரியகோட்டை 8, முன்னவால் கோட்டை 1, அரசமங்கலம் 5, தென்குவளவேலி 3, கோயில் வெண்ணி 1, இராயபுரம் 3, பழைய நீடாமங்கலம் 9, பாமணி 1, மேலத் திருப்பாழக்குடி 1, மேலவாசல் 2, துண்டக்கடளை 1, குன்னியூர் 1, அருணா நகர் 1, விக்கிரபாண்டியம் 4, சோத்திரம் கர்ணாவூர் 3, புத்தகரம் 1. மொத்தம் 50 மாணவர்கள்.
“புரொஜெக்டர்” கருவி நன்கொடை
பெரியாரியல் பயிற்சி வகுப்புகளுக்குப் பயன்படும் வகையில் மாநில வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி ‘Empower அறக்கட்டளை’ நிதியுதவியுடன் “புரொஜெக்டர்” கருவி ஒன்றை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்.