விடுதலை நாளிதழுக்கு புதிய சந்தாக்களை சேர்ப்பது பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முடிவு தஞ்சை மாநகர கழக தோழர்கள் கூட்டத்தில் தீர்மானம்

4 Min Read

தஞ்சாவூர், ஜூலை 24- தஞ்சாவூர் மாநகர கழக தோழாகள் கலந்துரையாடல் கூட்டம் 23-07-2025 புதன் இரவு 7 மணிக்கு பெரியார் இல்லத்தில் நடைபெற்றது.

மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை யேற்று மாநகரத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து உரையாற்றினார்.

மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட செயலாளர் அருணகிரி, மாவட்ட துணைத் தலைவர் பா. நரேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ரெ.சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்டாலின், மாநகரத் தலைவர் செ. தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் இரா.வீரகுமார், ஆகியோர் முன்னிலை ஏற்று மாநகரத்தின் செயல்பாடுகள், பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது, விடுதலைச் சந்தா திரட்டுவது, பெரியார் பிறந்த நாள் விழாவை நடத்துவது குறித்தும் உரையாற்றினர்

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் விடுதலை அறிக்கையினை தோழர்களுக்கு படித்து காட்டி பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி தருவதின் அவசியம் குறித்தும் சுயமரியாத இயக்க நூற்றாண்டு விழா நிறைவு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது மற்றும் விடுதலை சந்தாக்களை திரட்டி தருவதின் அவசியம் குறித்தும் தொடக்க உரையாற்றினார்.

தனபால், ஆசிரியர் நாகநாதன், கவிஞர் பகுத்தறிவுதாசன், சாமி. கலைச்செல்வன், பேராசிரியர் ஜோதிபாசு, பாவலர் பொன்னரசு, வெ.துரை, விசுவநாதன், ஏ.வி.என். குணசேகரன், லட்சுமணன், சிந்தனையரசு, அஞ்சுகம், பிரகாஷ், அழகிரி, பெரியார் சமூக காப்பு அணி இயக்குனர் தே.பொய்யாமொழி, மலர்கொடி, சந்துரு, மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் செந்தூரபாண்டியன், பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல், மாநில கலைத்துறை செயலாளர் ச. சித்தார்த்தன், கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கழக சொற்பொழிவாளர் பெரியார் செல்வன், அந்தோணிசாமி, பொன்னாபூர் திருநாவுக்கரசு, பேராசிரியர் குட்டிமணி, இளவரசன், தமிழன் பேக்கரி சிவா, உள்ளிட்ட கழகத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். அ.பெரியார்செல்வம் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

தஞ்சைமாநகரத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியில் தஞ்சாவூர் மாநகரத் தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.

“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் முதல் தவணையாக 6 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2-வது தவணையாக  ரூ. 1000000/- (பத்து இலட்சம்) நிதித் திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அறிவுலக  ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை ( செப் – 17 சமூகநீதி நாள்) மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில், தஞ்சை மாநகரத்தில் உள்ள கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, மாநகரின் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து திராவிடர்களின் திருநாளாக கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த  நாளை எழுச்சியுடன் கொண்டாடும் வகையில்  பெரியார் பட ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தை 20.09.2025 அன்று தஞ்சை மாநகரத்தில் மாநகர கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மாணிக்கப்படுகிறது.

மாதம் ஒரு கூட்டம்

கழக கொள்கையினை விளக்கி மாதம் ஒரு தெருமுனைக் கூட்டம் மாநகர திராவிடர் கழகம் சார்பில் தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தனிவாகனத்தில் செல்வது

2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

அறிவுலக ஆசான் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிடர் மகளிர் பாசறை சார்பில் தஞ்சாவூர் இராசா மிராசுதார் மருத்துவமனைக்கு செப் – 18 அன்று குருதிக் கொடை வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாளை மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கு தஞ்சை மாநகரமெங்கும் மற்றும் புறவழிச்சாலை நெடுகிலும் சுவரெழுத்து மற்றும் சுவரொட்டி பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

திய பொறுப்பாளர்கள்

ஈபி காலனி பகுதி செயலாளர்: இரா.பரந்தாமன், புதிய பேருந்து நிலைய பகுதி செயலாளர்: வெ.துரை

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *