புனித யாத்திரையா? – உயிரைப் பலி வாங்கும் யாத்திரையா? மத்தியப்பிரதேசத்தில் விபத்தில் பக்தர்கள் மரணம் – பலர் காயம்!

1 Min Read

குவாலியர், ஜூலை 23 மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில் கன்வார் யாத்திரைக்காக பக்தர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கார் ஒன்று சென்றது.

அந்த கார் திடீரென பக்தர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றனர். காயமடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.

இதனால், மொத்த பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்து உள்ளது. இவர்கள் அனைவரும் சிதாவ்னா கிராம பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதுபற்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கூறும்போது, மொத்தம் 13 பேர் புனித யாத்திரை சென்றபோது, பக்தர்கள் மீது கார் ஒன்று மோதியது என தெரிவித்தனர். சாலையோரம் இவர்கள் சென்று கொண்டிருந்தபோது, கார் ஒன்று விரைவாக வந்துள்ளது. அதன் டயர் திடீரென வெடித்துள்ளது.

இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் இவர்கள் மீது மோதியுள்ளது. இதில், 4 பேர் பலியானார்கள். 6 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *