கொரிய விமான விபத்தில் 173 பேர் உயிரிழப்பு பறவை மோதியதால்தான் விபத்து ஏற்பட்டது புலனாய்வுக்குழுத் தகவல்

1 Min Read

சியோல், ஜூலை 23- தென் கொரியாவில் 2024 டிசம்பர் மாதம் விபத்துக்குள்ளான ஜெஜு ஏர் பயணிகள் விமானம் பறவை மோதியதாலேயே விபத்துக்குள்ளானதாக அந்நாட்டுப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 29 அன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து தென்கொரியாவின் முவான் நகருக்கு 175 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் வந்துகொண்டிருந்த ஜெஜு ஏர் AI5744 விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையின்படி, விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும் இருந்த இறகுகள் மற்றும் இரத்தக் கறைகள், பைக்கால் டீல் (Baikal Teal) என்ற இடம்பெயர்ந்த வாத்து வகையைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே பறவை மோதியமையே விபத்திற்குக் காரணம் எனப் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பன்னாட்டு ஊடகங்களில் வெளியான காணொலிகளில், விமானம் ஓடுபாதையில் சறுக்கிச் சென்று சுவரில் மோதி, பின்னர் தீப்பிடிப்பது பதிவாகி யுள்ளது. இந்தத் துயர விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு விமானப் பணியாளர்கள் மட்டுமே உயிர் பிழைத்ததாகக் குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *