புதுடில்லி, ஜூலை 22 நாடு முழுவதும் உள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 185 மருந்துகள் தரமற்ற வையாக இருப்பது கண்டறி யப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் (CDSCO) அறிவித்துள்ளது.
இந்தத் தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப் படும் எனவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன. மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப் பாட்டு வாரியங்கள் மூலம் நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்துகளும் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளித் தொற்று, கிருமித் தொற்று, ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட நோய்களுக்குப் பயன் படுத்தப்படும் 185 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண் டறியப்பட்டது. இந்தத் தரமற்ற மருந்துகளின் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பொது மக்கள் இந்த விவரங்களை அறிந்து கொண்டு எச்சரிக்கையுடன் செயல் படலாம் என்று மருந்து கட்டுப் பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.