வாசிங்டன்டி.சி., ஜூலை 22- அமெரிக்காவிலிருந்து குடியேறிகளை வெளியேற்றுவதில் அதிபர் டோனல்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக இருப்பதாகப் பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் கருதுவதாக CNN தொலைக் காட்சி நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 55 விழுக்காட்டினர், அதிபர் டிரம்ப் குடியேற்றக் கொள்கையில் கடுமையான போக்கைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இதே ஆய்வு நடத்தப்பட்டபோது, இவ்வாறு கருதியவர்களின் எண்ணிக்கை 45 விழுக் காடாக இருந்தது குறிப் பிடத்தக்கது.
அதிபர் டிரம்ப்பின் எதிர்த்தரப்பான ஜனநாயகக் கட்சியினரில் 90 விழுக்காட்டினர், அவரது தீவிர நடவடிக்கை களைக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
அதேவேளையில், அவரது குடியரசுக் கட்சியினரில் 85 விழுக் காட்டினர் அதிபர் செய்வது சரிதான் என்று கருதுவதாக CNN ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இது குடியேற்றக் கொள்கை தொடர்பாக அமெரிக்க மக்களிடையே நிலவும் ஆழமான கருத்து வேறுபாட்டை வெளிப் படுத்துகிறது.