அமெரிக்காவில் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கை ‘மிகவும் கடுமையானது’ என்கிறது புதிய ஆய்வு

1 Min Read

வாசிங்டன்டி.சி., ஜூலை 22-  அமெரிக்காவிலிருந்து குடியேறிகளை வெளியேற்றுவதில் அதிபர் டோனல்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மிகவும் கடுமையாக இருப்பதாகப் பெரும்பான்மையான அமெரிக்க மக்கள் கருதுவதாக CNN தொலைக் காட்சி நடத்திய புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 55 விழுக்காட்டினர், அதிபர் டிரம்ப் குடியேற்றக் கொள்கையில் கடுமையான போக்கைப் பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் இதே ஆய்வு நடத்தப்பட்டபோது, இவ்வாறு கருதியவர்களின் எண்ணிக்கை 45 விழுக் காடாக இருந்தது குறிப் பிடத்தக்கது.

அதிபர் டிரம்ப்பின் எதிர்த்தரப்பான ஜனநாயகக் கட்சியினரில் 90 விழுக்காட்டினர், அவரது தீவிர நடவடிக்கை களைக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.

அதேவேளையில், அவரது குடியரசுக் கட்சியினரில் 85 விழுக் காட்டினர் அதிபர் செய்வது சரிதான் என்று கருதுவதாக CNN ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இது குடியேற்றக் கொள்கை தொடர்பாக அமெரிக்க மக்களிடையே நிலவும் ஆழமான கருத்து வேறுபாட்டை வெளிப் படுத்துகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *