தென் கொரியாவில் வரலாறு காணாத மழை 14 பேர் பலி, பருவநிலை மாற்றம் கவலை

1 Min Read

சியோல், ஜூலை 22- தென் கொரியாவில் கடந்த அய்ந்து நாட்களாகப் பெய்துவரும் இடைவிடாத கனமழைக்கு 14 பேர் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று (ஜூலை 21, 2025) பெய்த மழையால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அய்ந்து பேரைக் காணவில்லை என்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக் கலாம் என அஞ்சப்படுகிறது.

தென் கொரியத் தலைநகர் சியோலில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியோங்கி (Gyeonggi) மாவட்டத்தில் கிட்டத் தட்ட 170 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், கியோங்கி மாவட்டத்தில் உள்ள சான்சியோங் (Sancheong) நகரில் மிக அதிக அளவாக 800 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் சான்சியோங் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக, தென் கொரியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் பருவமழை பெய்வது வழக்கம். இதற்காக நாடு வழக்கமாகத் தயாராக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு நாட்டின் தெற்கு மாவட்டங்களில் எதிர்பார்க்காத அளவில் மழை பெய்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளப் பாதிப்புகளின் தீவிரத்தை எடுத்துக்காட்டுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *