திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய வேற்று மதத்தைச் சேர்ந்த நான்கு பேர் பணி இடைநீக்கம்

1 Min Read

திருமலை, ஜூலை 21- திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றிய வேற்று மதத்தைச் சேர்ந்த 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருமலை-திருப்பதி தேவஸ்தானம், ஆந்திர மாநில அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்டதாகும்.

தேவஸ் தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண் டும். இந்துக்கள் அல்லாத பிற வேற்று மதங்களை சேர்ந்தவர் கள் பணியாற்ற அனுமதியில்லை.

வேற்று மதங்களை சேர்ந்தவர் களை பணியிடை நீக்கம் செய்வது அல்லது அவர்கள் கேட்டுக் கொண்டால் அரசுத் துறைக்குப் பணியிட மாற்றம் செய்ய ஏற்பாடு செய்வது என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

அதன்படி, திருப்பதி தேவஸ் தானத்தில் வேற்று மதத்தை பின் பற்றுபவர்கள் 4 பேர் அடையாளம் காணப்பட்டனர். 4 ஊழியர்களும் தேவஸ்தானத்தின் நடத்தை விதிகளை பின்பற்றவில்லை என்றும், ஒரு இந்து மத அமைப்பை பிரதி நிதித்துவப்படுத்தி பணிபுரிந்த ஊழியர்களாக, தங்கள் கட மைகளை செய்யும்போது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவர்கள் 4 பேர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *