உக்ரைன் மீது ரஷ்யா பெரும் தாக்குதல் 300 ட்ரோன்கள், 30க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீச்சு – ஒடேசாவில் ஒருவர் பலி!

1 Min Read

கீவ், ஜூலை 20- ரஷ்யா, உக்ரைன் மீது 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மற்றும் 30க்கும் மேற்பட்ட குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி மிகப் பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கருங்கடல் துறைமுக நகரமான ஒடேசா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒடேசா நகர மேயர் ஹென்னாடி ட்ருக்கானோவ் வெளியிட்டுள்ள தகவலின்படி, 20க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணை நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்திலிருந்து அய்ந்து பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இதுகுறித்து தெரிவிக்கையில், ஒடேசா தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், உக்ரைனின் வடகிழக்கு சுமி பகுதியில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *