நாகர்கோவில் மாநகர் பகுதியில் விழிப்புணர்வு பரப்புரை

1 Min Read

நாகர்கோவில், ஜூலை 19- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு, நீதிமன்ற சாலை பகுதியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிர மணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கிவைத்தார். பொதுமக்களுக்கு தந்தை பெரியாருடைய கருத்துக்கள் அடங்கிய நூல்கள், துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

கழக காப்பாளர் ம.தயாளன், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மு.இராசசேகர், மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகி யோர் முன்னிலை வகித்தனர், மகளிரணி தலைவர் சு.இந்திராமணி, மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், தோவாளை ஒன்றிய தலைவர் மா. ஆறுமுகம், கழகத் தோழர்கள் கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை, எ.ச. காந்தி, மு.குமரிச் செல்வன் மற்றும் பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *