அமெரிக்காவில் பிறந்த குழந்தையை தத்தெடுக்க இந்தியர்களுக்கு உரிமை இல்லை மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

1 Min Read

மும்பை, ஜூலை 18 மும்பையில் வசிக்கும் ஓர் இணையருக்கு அமெரிக் காவில் உறவினர்கள் உள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு உறவினர்களுக்கு அமெ ரிக்காவில் பிறந்த குழந்தையை ஒரு சில மாதங்களிலேயே இவர்கள் இந்தியா அழைத்து வந்து விட்டனர்.

உரிமை இல்லை

இந்நிலையில் அமெரிக்க குடியுரிமை பெற்ற அந்த குழந்தையை தாங்கள் தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என மும்பை தம்பதி உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரேவதி மொஹிதி தேரே மற்றும் நீலா கோகலே ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

சிறார் நீதி மற்றும் தத்தெடுத்தல் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், இந்த குழந்தை தற்போது பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டிய சூழலிலோ அல்லது சட்ட சிக்கலிலோ இல்லை. உறவினர்களின் குழந்தையாக இருந்தாலும், வெளிநாட்டு குடியுரிமை பெற்ற குழந்தையை தத்தெடுக்க இங்குள்ள சட்டத்தில் இடம் இல்லை. அமெரிக்க குழந்தையை தத்தெடுக்க மனுதாரர்களுக்கு அடிப்படை உரிமை இல்லை.

முதலில் அமெரிக்க சட்டவிதி முறைகள்படி அந்நாட்டு குழந்தையை தத்தெடுக்கும் நடைமுறைகளை மனுதாரர்கள் முடிக்க வேண்டும். அதன்பின்பே அடுத்தகட்ட நடவடிக் கைகளை மனுதாரர்கள் மேற்கொள்ள முடியும். இவ்வாறு நீதிபதிகள் தெரி வித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *