பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும் சட்டம் அமலுக்கு வந்தது

1 Min Read

சென்னை, ஜூலை 17– பொது இடங்கள், நீர்நிலைகளில் மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும் சட்டம் அமலுக்கு வந்தது.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

இதன்ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதம் 5 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதில், உயிரி மருத்துவக் கழிவுகளை குவித்தல், அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டுவந்து கழிவுகளை கொட்டுவோர், குவித்து வைப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும்மசோதாவும் ஒன்று.

இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து சட்டம் அமலுக்கு வந்த நிலையில் இந்த சட்டத்திருத்தம் ஜூலை 8ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *