புதுடில்லி, ஜூலை 17- நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்களை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடர் 21-ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்டவை குறித்த எதிர்க்கட்சிகளின் சந்தே கங்கள் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.
பரபரப்பான சூழ லில் நடைபெற உள்ள இந்த தொடரில் பல் வேறு முக்கிய மான சட்ட அலுவல் களை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக 8 புதிய மசோ தாக்களை இந்த தொடரில் அறிமுகம் செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய மசோதாக்கள்
அந்தவகையில் தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, புவிசார் பாரம் பரிய தளங்கள் மற்றும் நினை வுச்சின்னங்கள் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) மசோதா, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு (திருத்தம்) மசோதா ஆகிய மசோதாக்களை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் மணிப்பூர் சரக்கு மற்றும் சேவைகள் வரி (திருத்தம்) மசோதா, ஜன விஸ்வாஸ் (விதிகளில் திருத்தம்) மசோதா, அய்.அய்.எம் (திருத்தம்) மசோதா மற்றும் வரி விதிப்புச்சட்டங்கள் (திருத்தம்) மசோதா போன்ற மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இவற்றை தவிர கடந்த பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற தேர்வுக்குழுவின் பரிசீல னையில் இருக்கும் புதிய வருமான வரி மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிப்பதற் கான நாடாளுமன்ற ஒப்புதலை பெறவும், மாநிலத்துக்கான மானியக ்கோரிக்கைகளுக்கு ஒப்புதல் பெறவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் திட்டம்
இவ்வாறு ஏராளமான சட்ட நடவடிக்கைகளுக்கு அரசு தயாராகி வரும் நிலையில், எதிர்க்கட்சி களும் நாடாளு மன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப தயாராகி வரு கின்றன.
குறிப்பாக ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அதை நிறுத்தியதற்கான உரிமை கோரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அறி விப்பு, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளில் ஒன்றிய அரசின் பதில் கேட்டு போர்க்கொடி தூக்க முடிவு செய்துள்ளன.