நீதிமன்றங்களில் கழிப்பறை பற்றாக்குறை விவகாரம் உயர்நீதிமன்றங்களை கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம்

2 Min Read

புதுடில்லி, ஜூலை 17  கழிப்பறை வசதிகள்பற்றிய விவரங்களை நீதிமன்றத்தில் அடுத்த 8 வாரங்களில் அறிக் கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான எதிர் விளைவு்களை சந்திக்க நேரிடும் என உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றங்களை கடித்து கொண்டுள்ளது.

நாட்டில் பொதுமக்களுக்கு சட்ட ரீதியாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் நீதிமன்றங் களுக்கு நாள்தோறும் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் நீதி மன்ற ஊழியர்கள் என பலர் வந்து செல்வார்கள். ஆனால், அவர்களுக்கு போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததுபற்றி வழக்குரைஞரான ரஜீப் கலிதா, உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதுபற்றி கடந்த ஜனவரி 15-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. அப்போது, முறையான தூய்மை என்பது அரசியல் சாசனத்தின் பிரிவு 21-இன் கீழ் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தது.

அதன் தீர்ப்பில், ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக அனைத்து நீதிமன்ற வளாகங் களிலும் மற்றும் தீர்ப்பாயங் களிலும் கழிப்பறை வசதிகள் உள்ளன என உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவித்தது. உயர்நீதிமன்றங்கள் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதனை உறுதி செய்யும்படி உத்தரவுகளை பிறப்பித்தது.

நீதிபதி ஒருவரின் தலை மையின் கீழ் உயர்நீதிமன்றங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு கமிட்டியை அமைக்கவும் உத்தரவிட்டது. இதேபோன்று சராசரியாக நாள் ஒன்றுக்கு நீதிமன்றங்களுக்கு எத்தனை பேர் வருகின்றனர் என எண்ணிக்கையை கவ னித்தும், போதிய தனி கழிப்பறைகள் கட்டப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன என உறுதி செய்து, அதற்கான நிதியொதுக்குவது உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு விரிவான திட்டம் வகுக்கும்படியும் கமிட்டிக்கு உத்தரவிட்டது.

4 மாதங்களில் அதுபற்றிய ஒப்புதல் அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் கேட்டு கொண்டது. இந்நிலையில், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், கல்கத்தா, டில்லி மற்றும் பாட்னா உயர்நீதிமன்றங்களே, இதுபற்றி எடுத்த நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளன. நாட்டில் மொத்தம் 25 நீதிமன்றங்கள் உள்ளன. மீதமுள்ள 20 நீதிமன் றங்கள் உத்தரவுக்கேற்ப நடந்து கொள்ளவில்லை.

இதுபற்றி உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தபோது, இதற்காக வேதனை தெரிவித்தனர். இந்தியாவின் அனைத்து நீதி மன்ற வளாகங்களிலும் மற்றும் தீர்ப்பாயங்களிலும் கழிப்பறை வசதிகள் உள்ளன என உறுதி செய்யப்பட வேண்டும் என கூறி அதுபற்றிய ஒப்புதல் அறிக் கையை சமர்ப்பிக்க 8 வார கால அவகாசமும் அளித்துள்ளனர்.

அப்படி, அடுத்த 8 வாரங்களில் அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதி பதிகள் அமர்வு கடுமையாக குறிப் பிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *