பஞ்சாப் பொற்கோவிலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

1 Min Read

அமிர்தசரஸ், ஜூலை 16 பஞ்சாப் பொற்கோவிலுக்கு நேற்று 2-ஆவது நாளாக வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து மோப்ப நாய் குழு ஒன்று கோவிலில் சோதனை மேற்கொண்டது. இதுபற்றி ஷிரோமணி குர்த்வாரா பர்பந்தக் கமிட்டியின் செயலாளர் பிரதாப் சிங் கூறும்போது, பொற்கோவில் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் முக்கிய மத வழிபாட்டு தலம் ஆகும்.

இதற்கு இ-மெயில் வழியே வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறை அதிகாரிகளின் கடமையாகும் என கூறியுள்ளார்.

இதுபற்றி பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநரக்கு கமிட்டி சார்பில் கடிதம் எழுதியுள்ளோம் என்றும் கூறினார். எனினும், இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு பக்தர்கள் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டார். இதுபற்றி வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடந்து வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *