திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பச்சைத் தமிழர் காமராஜர் 123ஆவது பிறந்தநாள் விழா

1 Min Read

திருச்சி, ஜூலை15-  திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று (15.7.2025) காலை 9.00 மணியளவில், பச்சைத் தமிழர் காமராஜர் அவர்களின் 123ஆவது பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் பள்ளியின் முதல்வர் முனைவர்.க.வனிதா காமராசரின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவிகள், எஸ்.யுவேரா “காமராசரின் களங்கமில்லா வாழ்வு” என்ற தலைப்பில் சிறப்புரையும், மாணவி டி.தக்சயா “ராஜனுக்கு ராஜர் காமராஜர்” என்ற தலைப்பில் கவிதையும் வழங்கினர்.

காமராஜர் குறித்த பாடல், பொன் மொழி களையும் மாணவர்கள் குழுவாக வழங்கினர்.

பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றம் சார் பில் நடத்தப்பட்ட கல்வி வளர்ச்சி நாள் போட்டிகளில் பொன் மொழி ஒப்புவித்தல், கையெழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும் வழங்கிச் சிறப்பித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *