சுகமான தூக்கத்துக்கு எளிய வழிமுறைகள்

1 Min Read

*பகலில் தூக்கம் 30-40 நிமிடங்கள் மட்டும் போதும்.
*மாலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும்.
*தூக்கத்தைக் கொடுக்கும் மாத்திரைகளைத் தவிர்க்கவும்.
*இரவு 8 மணிக்கு மேல் காபி, மது அருந்தக் கூடாது, புகைபிடிக்கக் கூடாது.
*படுப்பதற்கு முன்பு வெந்நீரில் குளித்துவிட்டு வெதுவெதுப்பான பால் அருந்தினால் ஆழ்ந்த தூக்கம் வரும்.
*நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.
*படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் சற்று மங்கிய வெளிச்சத்தில் இருப்பது நல்லது.
*படுக்கும் இடத்தை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்தவும்.
*படுக்கை அறையில் டி.வி. பார்ப்பதையோ, புத்தகம் படிப்பதையோ தவிர்ப்பது நல்லது.
*படுத்த உடனே 30-45 நிமிடங்களுக்குள் தூக்கம் வரவில்லை என்றால் வானொலி கேட்கலாம்.
*மன உளைச்சலும், கவலைகளும் தூக்கத்தின் எதிரிகள். அதைத் தவிர்க்க சுமார் அரை மணி நேரம் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி *படுக்கைக்குச் சென்றால் ஆழ்ந்த உறக்கம் நிச்சயம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *