நேற்று (12.07.2025) பெங்களூரில் நடைபெற்ற இன்டர்நேஷனல் பிசினஸ் கான்பிரன்ஸ் நகரத்தார்-2025 என்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்து விழா சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் பேசுகையில் நகரத்தாரின் வாழ்வியல் முறைகள் பற்றியும் சிவகங்கைச் சீமையில் அவர்கள் ஆற்றிய பங்கு பற்றியும் விளக்கி எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் உட்பட கருநாடக மாநில உயர் அலுவலர்கள் நகரத்தார் பலர் கலந்து கொண்டனர்.
இன்டர்நேஷனல் பிசினஸ் கான்பிரன்ஸ்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books