பெண்ணின் வாக்காளர் அட்டையில் பீகார் முதலமைச்சர் படம்

1 Min Read

பாட்னா, ஜூலை 13 பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் மாதேபுரா பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷா குமாரி (30). இவர்  தனது வாக்காளர் அடையாள அட்டை யில் இருந்த முகவரியை மாற்றுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு கிடைத்த புதிய வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி சரியாக மாற்றப்பட்டிருந்தாலும், அபிலா ஷாவின் புகைப்படத்திற்குப் பதிலாக அம்மாநில முதலமைச்சர்  நிதிஷ்குமாரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து வாக்குச்சாவடி நிலைய அதிகாரியிடம் அபிலாஷா குமாரி முறை யிட்டுள்ளார். இதற்கு வாக்குச்சாவடி நிலைய அதிகாரி,”இந்த சம்பவத்தை வெளியே சொல்லாமல் அமைதியாக இருங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது” என மிரட்டும் பாணியில் கூறியுள்ளார். வாக்குச்சாவடி நிலைய அதிகாரி கூறியதை அபிலாஷா குமாரி செய்தி யாளர்கள் சந்திப்பில் விரிவாகக் கூற, வாக்காளர் அடையாள அட்டையின் தரவு மேலாண்மையின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் கிளம்பியுள்ளது. பீகார் பாஜக கூட்டணி அரசு நிர்வாகத்திற்கு காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட எதிரிக்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கண்டனத்தை தொடர்ந்து பீகார் அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *