‘குரூப் 4’ தேர்வுக்கான வினாத்தாள் கசிவா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுப்பு

1 Min Read

சென்னை, ஜூலை 12– தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று (12.7.2025) நடைபெறும் குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய மய்யங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நேற்று (11.7.2025) நடைபெற்றது.

இந்த நிலையில் தனியார் சொகுசு பேருந்தில் வினாத்தாள் சில இடங்களில் அனுப்பி வைக்கப்பட்ட தோடு, பேருந்தில் நுழைவுக் கதவை ஏ4 பேப்பரை கொண்டு சீல் வைத்தது பேசுபொருளானது. வழக்கமாக கொண்டு செல்வது போல, கண்டெய்னர்களில் எடுத்துச் செல்லாமல், இதுபோல் பேருந்துகளில் எடுத்துச் செல்வதால் வினாத்தாள் கசிந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்று சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இது குறித்து டிஎன்பிசி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறுகையில், குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள்காள் அனைத்தும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தற்போது வரை வினாத்தாள்கள் எது வும் கசியவில்லை. மேலும் மதுரையில் வினாத்தாளை கண்டெய்னர் மூலமாக எடுத்துச் செல்லாமல் இதுபோன்ற தனியார் பேருந்துகள் மூலம் எடுத்துச் சென்றது குறித்து விளக்கம் கேட்டு இருக்கிறோம்.

இருப்பினும் மதுரையில் பேருந்தில் காவல்துறை பாதுகாப்புடன் தான் வினாத்தாளை கொண்டு சென்று உள்ளனர். வினாத்தாள் கசிய வாய்ப்பு இல்லை” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *