டாக்டர் வி.ஜி.சந்தோசம், மல்லை சத்யா ஆகியோருக்கு அமைதிக்கான தூதுவர் விருது

1 Min Read

லண்டன், ஜூலை 8- இங் கிலாந்து தலைநகர் லண்டன் மாநகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு மனித உரிமைகள் செயலகம் இது ஒரு உலகளாவிய இயக்கம் 100 மேற்பட்ட நாடுகளில் அமைதி மற்றும் மனித உரிமைகள் சுற்றுச் சூழலுக்காக விழிப்புடன் செயல் பட்டு அய்.நா. மன்றத்திற்கு அறிக் கைகள் சமர்ப்பித்து வருகிறது  இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் அதிகாரம் மிக்க தலைவர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

விருது

சுற்றுச்சூழல் மற்றும் பாலைவன மாவதலை தடுக்கும் நாள் கருத்த ரங்கம் நடைபெற்றது இதில் பங்கேற்று உரையாற்றிய விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி பெருந்தமிழன் டாக்டர் வி.ஜி.சந்தோசத்திற்கும், மல்லை தமிழ் சங்கத்தின் தலைவர் மல்லை சத்யாவுக்கும் பன்னாட்டு மனித உரிமைகள் இயக்கத்தின் உயரிய விருதான அமைதிக்கான தூதுவர் விருதினை பன்னாட்டு மனித உரிமைகளின் இங்கிலாந்து நாட்டின் தலைமைச் செயலாளர் ராபின் மாரிஸ் அவர்களும், பிபிசி ராயல் தலைமை அதிகாரி இயன் பெல்நர் டர்னர் (Ian Pelnar Turner) மற்றும் இதன் தலைவர் சிறந்த சமூக செயல்பாட்டாளர் அப்துல் பாஷித் சையத் அவர்களும்  இணைந்து வழங்கினர்.

இவ்விழாவில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் தலைப்பில் டாக்டர் amb. கேனான் ஓட்டோ (amb. Canon Otta) சிறப்புரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *