எந்த ஆட்சியாக இருந்தாலும் நூறு விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது தொல். திருமாவளவன் எம்.பி. விளக்கம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜூலை 08 எந்த ஆட்சி நடந்தாலும் அவர்கள் 100/100 விழுக்காடு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்

சென்னையில் தாத்தா ரெட்டை மலைச் சினிவாசனாரின் பிறந்த நாள் விழாவில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

வாக்குறுதி

தேர்தல் பணி என்பது எங்கள் களப் பணிகளில் ஒன்று என்றும் அதுவே எங்கள் முதன்மையான பணி அல்ல., தேர்தல் நெருங்கும் சூழலில் அதனை நாங்கள் தீவிர்படுத்துவோம் என கூறினார். தற்போது கட்சியின் மறு சீரமைப்புக்கான பணிகளை கவனம் செலுத்தி வருகிறோம் என தெரிவித்தார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கிறது., அதுமட்டுமல்லாது திமுக கூட்டணி உறுதியாகவும் கட்டுக்கோப்பாகவும் இருக்கிறது என கூறினார்.

முக்கிய கோரிக்கைகள்

பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அது அனைவருக்கும் தெரிந்த உண்மை என்றும் முக்கியமான சில கோரிக்கைகள் நிறை வேற்றப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாத, மறுக்க முடியாத ஒன்றுதான் எனக் கூறினார். பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கைகளை விடுதலை சிறுத்தைகளும் முதலமைச்சருக்கு அவ்வப்போது சுட்டிக்காட்டி உள்ள தாகவும், தேர்தலுக்கு முன்னதாக அதனை நிறைவேற்றுவார்கள் என எண்ணுவதாக கூறினார். அதேபோல் எந்த கட்சியாக இருந்தாலும் 100க்கு 100 விழுக்காடு வாக்குகளை நிறைவேற்ற முடியாது என தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *