நம் நாட்டில் வழக்கிலிருக்கும் கலையின் போக்கு, கேடும், இழிவும் வளர்வதற்குக் காரணமாகவும், மக்களது முன்னேற்றத்திற்குத் தடையாயும் அமைந்து – அங்கு ஆரியர்க்கும், பித்தலாட்டக்காரர்களுக்கும் அனுகூலமாகவே இருக்கின்றன. சங்கீதம், நடிப்பு, நாட்டியம், இலக்கியம் ஆகியவற்றில் எல்லாம் கடவுள்களும், சமயங்களும் புகுத்தப்பட்டிருக்கின்றனவே ஒழிய அறிவு வளர்ச்சிக்கும், ஒழுக்க வளர்ச்சிக்கும், படிப்பினைக்குமான சங்கதிகள் ஏதாகிலும் இருக்கின்றனவா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’