அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம் வழங்கப்படும்! தமிழ்நாடு அரசு உத்தரவு

1 Min Read

சென்னை, ஜூலை4- அரசு ஊழியர்களுக்கு மட்டுமன்றி, அவர்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலர் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவு விவரம்:

அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் தங்களது பணிக் காலத்தில் தேவை யின் அடிப்படையில் திருமண முன்பணம் பெற்றுக் கொள்ளலாம். அந்தத் தொகை இது வரை பெண்களுக்கு ரூ.10 ஆயிரமாகவும். ஆண் களுக்கு ரூ.6 ஆயிரமாகவும் இருந்தது. இதனை அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொது வாக 5.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல் படுத்தும் வகையில், திருமண முன்பணத் தொகையானது அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குழந்தை களுக்கும் வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி அல்லது தந்தை, தாய் ஆகிய இருவருமே அரசு ஊழியராக இருக்கும் பட்சத்தில், யாரேனும் ஒருவருக்கு மட்டுமே முன்பணத் தொகை வழங்கப்படும்.

முன்பணத் தொகை முழுவதும் தனிநபர் பாதுகாப்பு பத்திரத்தின் வழியாக விடுவிக்கப்படும். திருமண தேதியிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் தொகை வழங்கப்படும். முன்பணத் தொகையானது 36 மாதங்களில் பிடித்தம் செய்யப்படும் என்று அந்த உத்தரவில் உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *