யூரிககாரின்
சுபான்ஸு சுக்லா
ராக்கேஷ் சர்மா
விண்ணில்….
இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப் பட்ட நபர்களும், விண் வெளியில் பறக்கத் தயா ராகும் நபர்களும் உயர் ஜாதியினராகவே உள்ளனர்.
ராக்கேஷ் சர்மா, சுபான்ஸு சுக்லா (மத்திய இந்திய பார்ப் பனர்), இவர்கள் இருவரும் விண்வெளிக்குச் சென்று விட்டனர்.
அடுத்த விண்வெளிப் பயணத்திற்குத் தயாராக உள்ள இந்திய விண்வெளி ஆய்வாளர்கள் அஜித் கிருஷ்ணா, அங்கட் பிரதாப் – அனைவருமே பார்ப் பனர்கள்.
பிரம்மனின் பாதத்தில் பிறந்தவர்கள் என்று கூறப் படுபவர்களுக்கு விண் வெளிப்பயணம் கூட மறுக்கப்படுகிறதே?
1984 ஏப்ரல் 3இல் ராகேஷ் சர்மா என்ற பார்ப்பனர் சோவியத் யூனியனின் சோயுஸ் டி– 11 விண்கலத்தில் பயணித்து இந்தியாவின் முதல் விண்வெளி வீரராகப் பதிவு செய்யப்பட்டார். இரண்டு சோவியத் வீரர்களுடன் அந்தப் பயணம் அமைந்தது.
விண்வெளிக் கலத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு முன் மூன்று முறை அவர் உச்சரித்தது காயத்ரி மந்திரம்.
இதனை அப்பொழுது ‘தாம்ப்ராஸ்’ என்னும் பார்ப்பன சங்க ஏடு வெளியிட்டு மகிழ்ந்தது. விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற சோவியத் யூனியனைச் சேர்ந்த யூரிககாரின் 1961ஏப்ரல் 12 அன்று வோஸ்டோக் விண்கலத்தில் பூமியைச் சுற்றி 108 நிமிடங்கள் பயணித்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் இவர்தான்!
அவர் சொன்ன வார்த்தை ‘‘விண்வெளிக்குச் சென்றேன் – கடவுளை எங்கும் காணவில்லை’’ என்பதுதான்.
இந்த இடத்தில் ராஜேஷ் சர்மாவையும் நினைத்துப் பாருங்கள்! வித்தியாசம் புரியும்!
– மயிலாடன்