திருமருகலில் தந்தை பெரியார் சிலை நிறுவப்படும் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

viduthalai
2 Min Read

திருமருகல், ஜூன் 30- திருமருகல் ஒன்றியத்தில் அனைத்து கிளைக் கழகங்களிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கூட்டங்களை நடத்துவது கழகத் தோழர்கள் இல்லந்தோறும் கழக கொடி ஏற்றுவது என  கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

29-06-2025  ஞாயிற்றுக்கிழமை மாலை  6.00 மணியளவில்  திரு மருகல் திமுக அலுவலகத்தில் எழுச்சியுடன்  திருமருகல் ஒன் றிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர்  இராச.முருகையன், தலைமை வகித் தார். ஒன்றிய செயலாளர் சு.இராஜ் மோகன், அனைவரையும் வரவேற்றார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கி பேசினார்  நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் பொன்.செல்வராசு நாகை நகர தலைவர்  தெ.செந்தில்குமார், ஒன்றிய துணை தலைவர் கு.சின்னதுரை,  மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.ஆர். அறிவுமணி,மாவட்ட மகளீர் பாசறை தலைவர் செ. கவிதா,  மாவட்ட மகளீர் பாசறை செயலாளர்  த.ஜெயப்பிரியா, ஒன்றிய மகளிர் அணி செயலாளர் இரா. ரம்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் திருமருகல் வட்டார விவசாய அணி செயலாளர் மருங்கூர் காமராஜர், ஒன்றிய பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் சி. தங்கையன், மாவட்ட மாணவர் கழக தலைவர் மு. குட்டிமணி. திருமருகல் ஆடியபாதம், மருங்கூர் கணேசன், மகாலிங்கம், முனுசாமி, சாய்ராம், இலமுகில், பானுமதி, மாலா, சகுந்தலா, சா. அறிவாளன், மதன், ரூபன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இறுதியாக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் செ.பாக்கியராஜ், நன்றி கூறினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

திருமருகல் ஒன்றியத்தில் பழைய விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும். புதிய சந்தாக்களை சேர்ப்பது என முடிவு செய்யப்படுகிறது.

திருமருகல் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளை கழகங்களிலும் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி கழக அமைப்புகளை புதுப்பிப்பது எனவும் கிளைக் கழகங்கள் வாரியாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கூட் டங்களை நடத்துவது. கழகத் தோழர்கள் இல்லந்தோறும் கழக கொடி ஏற்றுவது என முடிவு செய்யப் படுகிறது.

ஜூலை 6ஆம் தேதி மன்னார் குடியிலும். 7ஆம் தேதி நன்னிலத் திலும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு விழா கூட்டங்களில் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று நமது தலைவரை வரவேற்று மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின், அவர்கள் சிறப்பு ரையுடன் சென்னை மறைமலை நகரில் 2025 அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டில் திருமருகல் ஒன்றியத்திலிருந்து தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது. மாநாட்டை விளக்கி சுவர் எழுத்து விளம்பரங்களை செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

திருமருகலில் சொந்தமாக இடம் வாங்கி. அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலை வைப்பது என முடிவு செய்யப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *